CMS & SPG
Church Missionary Society
இந்தியாவில் உள்ள சர்ச் மிஷனரி சொசைட்டி என்பது சர்ச் மிஷனரி சொசைட்டி (CMS) ஆல் நிறுவப்பட்ட ஒரு கிளை அமைப்பாகும், இது 1799 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்குக்கான மிஷன்களுக்கான சொசைட்டி என்ற பெயரில் நிறுவப்பட்டது, இது ஆங்கிலிகன் கம்யூனியன், பிற புராட்டஸ்டன்ட்டுகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து செயல்படும் ஒரு மிஷன் சங்கமாக இருந்தது. 1812 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அமைப்பு சர்ச் மிஷனரி சொசைட்டி என்று மறுபெயரிடப்பட்டது.
1814 ஆம் ஆண்டில் CMS இந்தியாவிற்கு மிஷனரிகளை அனுப்பத் தொடங்கியது மற்றும் சென்னை (மெட்ராஸ்) மற்றும் வங்காளத்திலும், பின்னர் 1816 இல் திருவிதாங்கூரிலும் மிஷன் நிலையங்களை நிறுவியது.[3] அடுத்த ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மிஷன் நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டன. பெண்கள் மத்தியில் பணி முக்கியமாக சர்ச் ஆஃப் இங்கிலாந்து ஜெனானா மிஷனரி சொசைட்டி மற்றும் ஜெனானா பைபிள் மற்றும் மருத்துவ மிஷனிடம் விடப்பட்டது.
For More about CMS ClickHere
SPG - Society for the Propagation of the Gospel
நற்செய்தியைப் பரப்புவதற்கான சங்கம் என்றால் என்ன?
வெளிநாட்டுப் பகுதிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கான சங்கம் (தற்போது நற்செய்தியைப் பரப்புவதற்கான ஐக்கிய சங்கம் என்று அழைக்கப்படுகிறது) 1701 ஆம் ஆண்டு ஒரு மிஷனரி சங்கமாக நிறுவப்பட்டது, இது இங்கிலாந்து திருச்சபையிலிருந்து மதகுருமார்களை குடியேறிகளுக்கு ஊழியம் செய்வதற்கும் காலனிகளில் உள்ள நம்பிக்கையற்றவர்களை மாற்றுவதற்கும் வழங்குகிறது.
For More about SPG ClickHere




மறக்க முடியாத மாமனிதர்கள்


Rev.Dr. John T. Tucker
Rev.Dr.ஜாண் தாமஸ் தக்கர்
ஜான் டக்கர் (1792-1873) (John Thomas Tucker) கிறிஸ்தவ இறைப்பணியாளர். சென்னையிலும் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும் கிறிஸ்தவ இறைப்பணியாற்றினார். லண்டன் மிஷன் சொசைட்டியில் செயல்பட்டார். சென்னையில் இன்றுள்ள டக்கர் ஆலயத்தின் போதகராக பணியாற்றினார். இவருடைய சகோதரி சாரா டக்கர். ஜான் டக்கர் இங்கிலாந்தில் கெண்ட் மாநிலத்தில் சௌத்பரோ பகுதியில் 1792ல் பிறந்தார். சாரா டக்கர் இவருடைய சகோதரி. ஜான் டக்கர் 1832ல் குருப்பட்டம் பெற்று சென்னையில் லண்டன் மிஷன் அமைப்பின் இறைச் செய்தியாளராக பணியாற்றினார். தூத்துக்குடி மாவட்டத்தில் சர்ச் மிஷனரி சொசைட்டி (சி.எம்.எஸ்) அமைப்பின் சார்பில் பனைவிளை என்னும் ஊரில் ஏமி கார்மிக்கேலுடன் இணைந்து பணியாற்றினார். ஜான் டக்கர் கால்டுவெல்லுடன் இணைந்து தூத்துக்குடியில் இறைப்பணியாற்றினார். ஜான் டக்கர் பாளையங்கோட்டையில் தன் சகோதரி சாரா டக்கர் அளித்த பணத்தில் 1895-ல் சாரா டக்கர் பள்ளியை உருவாக்கினார். அது இப்போது சாரா டக்கர் கல்லூரியாக உள்ளது. தமிழகத்தின் முதல் பெண்கள் கல்லூரியாக அது கருதப்படுகிறது. ஜான் டக்கர் சென்னை மண்ணடி பகுதியில் பணியாற்றிய ஆலயம் 1820-ல் கட்டப்பட்டது. அந்த ஆலயம் 1901-ல் விரிவாக்கிக் கட்டப்பட்டபோது அதற்கு ஜான் டக்கர் ஆலயம் என்று பெயரிடப்பட்டது. ஜான் டக்கர் இங்கிலாந்தில் வெஸ்ட் ஹென்ட்ரெட் பகுதியி பெர்க்ஸ் ஊரில் ஜனவரி 16, 1873-ல் மறைந்தார்.
பண்ணைவிளைக்கு இங்கிலாந்து CMS மிஷனரியாக வந்தவர்கள் ஜாண் தாமஸ் தக்கர் முக்கியமானவராவார். இவர் சுகவீனத்தினிமித்தம் இங்கிலாந்து சென்றவர் செப்டம்பர் 24, 1866 ல் இறந்த செய்தி வந்தது. இது திருநெல்வேலி CMS ல் அவருடைய இறப்பு மாபெரும் இழப்பு. (காண்க பிஷப் சார்ஜெண்ட் பக்கம் 107)
More Details Click Here
Sathiyavaan Rev Eesaaku Abraham
சத்தியவான் கனம் ஈசாக்கு ஆபிரகாம் (ஈசாக்கு ஐயர்)
சீவலப்பேரியில் 1838 ஆம் ஆண்டில் பிரம்மமுத்து தேவர் குடும்பம் ஆண்டவரை ஏற்றுக் கொண்டது. அவரது குமாரன் தான் நல்லக்கண்ணு. 1844 ஆம் ஆண்டு சீவலப்பேரிக்கு சென்ற தக்கர் ஐயர் நல்லகண்ணுவை படிக்க வைக்க விரும்பினார். ஆனால் தகப்பனாராகிய பிரம்மமுத்து தேவருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் நல்லக்கண்ணு பண்ணவிளைக்கு போகத்தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க வேறு வழியின்றி சம்மதித்து "நீ என் பிள்ளையல்ல, வெள்ளைக்காரர் பிள்ளை. நீ செத்துப்போய் விட்டாயென்று நினைத்துக் கொள்வேன்” என்று கூறி தக்கர் ஐயருடன் அனுப்பினார்.
பண்ணைவிளையில் அறிவிலும் கிறிஸ்து மார்க்கப் பண்பிலும் நன்கு தேர்ச்சியடைந்த நல்லக்கண்ணுவுக்கும், பெண்கள் போர்டிங் பாடசாலையில் அதே விதமாய்த் திகழ்ந்த இரண்டு பெண்களுக்கும் முறையே ஈசாக்கு, ராகேல், ஞானவடிவு என்ற பெயர்களுடன் தக்கர் ஐயர் ஞானஸ்நானம் 1845ல் கொடுத்தார். படிப்பு முடிந்த பின்னர் ராகேலை மணந்து சிலகாலம் உபதேசியாராகவும், விசாரணை உபதேசியாராகவும் ஊழியம் செய்த ஈசாக்கே குருப்பட்டம் பெற்றுப் பரிசுத்தவானாக வாழ்ந்து பண்ணைவிளையில் பல காலம் பணிவிடை செய்த சத்தியவான் கனம் ஈசாக்கு ஆபிரகாம் ஐயரவர்கள்.
கனம் ஈசாக்கு ஆபிரகாம் ஐயர் அவர்கள் 1869 முதல் 1900 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். இவர்கள் விசுவாசத்திற்கும் முன் மாதிரியான சாட்சியாகவும் வாழ்ந்தவர்கள். திருமணத்திற்கு தாலி கொண்டு வராத மாப்பிளைக்கு தன் மனைவியின் தாலியை கழற்றி கொடுத்த கொடை வள்ளல் ஆவார். இன்றும் பண்ணைவிளை பகுதியில் வழக்குகள் வாக்குவாதங்கள் ஏற்படுமாயின் அதனை நிரூபணம் செய்வதற்காக, 'ஈசாக்கு ஐயர் கல்லறையில் சத்தியம் பண்ணவா?" என்னும் பேச்சு வழக்காக விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது. கனம் ஈசாக்கு ஐயரின் கல்லறை பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலய ஆல்டரை ஒட்டி பின்புறம் ஆலய காம்பவுண்ட்க்குள் அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஈசாக்கு ஐயா கல்லறையை பாதுகாக்கும் வகையில் பண்ணைவிளை பங்களா திரு. J. மதிகேசன் அவர்கள் முயற்சியால் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. முதலாவது கல்லறைமுன்பு பதிக்கப்பட்ட சிலுவையை கம்பி வேலிக்கு முன் அவர்கள் முயற்சியால் வைக்கப்பட்டது. மேலும் அவர்கள் கூறுகையில், ”பெருங்குளத்தை சார்ந்த பலரும் (புறமதஸ்தர் கூட) வந்து இங்கு வந்து மெழுகுவா்த்தி ஏற்றி ஜெபித்து செல்வதை அடிக்கடி பார்க்கிறேன், காணிக்கை போடவும் செய்றாங்க… இதனை பொறுக்கி கொள்ள பள்ளி மாணவர்கள் பலர் வருவதால்தான், காணிக்கைகளை ஆலய முன்பு உள்ள உண்டியலில் போடுங்க என்று இதில் எழுதி வைத்தோம்’’ என்று தெரிவித்தார்கள். (வீடியோ யூடியுப்ல்)




Unforgettable Great Men
பண்ணைவிளையில் பிறதேசத்தில் இருந்து இங்கு வந்து அருட்பணி செய்தவர்கள் அல்லது பிறந்து - வளர்ந்து - ஊழியம் செய்த மாமனிதர்களின் தொகுப்பு




Dr. M. Ezra Sargunam
father bishop eci


Eva. J. Samuel
retired teacher - catechist


Bishop Rev. Christopher Asir
Madurai ramnad diocese
Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.