Holy Trinity Church Choir
2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரு.மோ. வசீகரன் ஜாண் உபதேசியாராக பணிபுரியும் போது, அவர்களின் முயற்சியால் பாடகர் குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அதற்கென்று சபை மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டது. அதற்கு உறுதுணையாக நின்று கவனிக்க, நன்கொடை பிரிப்பதற்கு உடன் இருந்து, திரு.ஆ.ஜெயசீலன் அவா்கள் பணி செய்தார்கள். காலஞ்சென்ற திரு.N.S.எட்வர்ட் ஆசிரியர் அவா்கள் பாடல்கள் கற்றுக் கொடுக்கும் பொழுது பாடகற்குழுவிற்கு பொறுப்பாய் கவனித்தார்கள். அதற்கான சீருடை, அமருவதற்கு பெஞ், இசைக்கருவி, அதற்கான டேபிள் அனைத்தும் தயார் செய்யப்பட்டது. 14.09.2003 அன்று அருட்திரு. கிறிஸ்டியான் தேவராஜ் குருவானவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 22 வருடங்களாக பாடகர் குழு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆா்கனிஸ்ட் ஆக நடுவைக்குறிச்சியில் இருந்து சகோதரா் வந்து உதவி செய்தார்கள். பின்னா் நம் சபையைச் சார்ந்த சகோ. செ. சாலமோன் தியோடா் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தற்பொழுது சகோ.ஜெ. கிப்சன் ஆா்கனிஸ்ட் ஆக உள்ளார்கள்.


Click Image to Full View
Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.