பரிசுத்த லுாக்கா ஆலயம், பண்ணைவிளை புதுார்
சபை வரலாறு (CHURCH HISTORY)
பண்ணைவிளை புதுார் பரிசுத்த லுாக்கா ஆலயத்திலிருந்து மேற்கே பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயமும், தென் மேற்கில் பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயமும் கிழக்கே கண்ணாண்டிவிளை, வன்னியனுார் கிராமங்களும் அமைந்துள்ளது. ஊரை சுற்றிலும் பனைமரங்கள், தோட்டங்கள் அமைந்துள்ளது ஊருக்கு அழகு சேர்க்கும் வண்ணம் இயற்கையான, அமைதியான 200 குடும்பங்கள் அடங்கிய கிராமம்.
1935 ஆம் ஆண்டுகளில் சிறிய பனை ஓலையிலான ஆலயத்தில் ஒருசில குடும்பமாக கர்த்தரை ஆராதித்து வந்தார்கள். பின்னர் 25 குடும்பங்கள் கர்த்தரை ஆராதிக்க, ஆலயம் சுற்று சுவர் மட்டும் மண்சுவர் ஆக கட்டி எழுப்பப்பட்டது. இயற்கையான பனை ஓலையாலான கூரை, 50 ஆண்டுகளுக்கு மேல் மண்சுவர், மண்ணினால் தரை பின்னர், மாட்டுச் சாணத்தில் மெழுகிய தரை என்று காலத்திற்கு ஏற்றாற்போல் சிறிய மாற்றங்கள் வந்தது. ஆனாலும் கர்த்தரை உறுதியாய் விசுவாசித்து வளர்ந்த தேவஜனங்கள் ஆண்டவரை ஆராதிக்க ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
1935 - 1967 ஆம் வருடங்களில் பண்ணைவிளை புதுார் விசுவாசிகள் அனைவரும் திருவிருந்து ஆராதனை, கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனை, ஈஸ்டர் பண்டிகை ஆராதனை, அறுப்பின் பண்டிகை மற்றும் பிற முக்கிய ஆராதனைகள் அனைத்திற்கும் பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயத்திற்கு நடந்து செல்வதே வழக்கமாக இருந்தது.
பண்ணைவிளை புதுார் சபை மக்களின் அயராது முயற்சியால் ஆலயம் கட்டும் பணிகள் 1964ம் ஆண்டு ஆரம்பமானது. எளிய சபை மக்களது நன்கொடை, குடும்ப வரி என்று ஆலய கட்டுமானப்பணிக்கென்று பணம் பெறப்பட்டது. பின்னர் அருகிலுள்ள தாய் சபை மக்கள், சுற்றுவட்டார கிராம மக்களின் நன்கொடை ஆலய கட்டுமானப்பணிக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் சபைமக்களுக்கு அளித்தது. குறிப்பாக ஆலய கட்டுமானப் பணிக்கு தேவையான பணத்தை கண்ணாண்டிவிளையை சார்ந்த திரு. K.R. ஆசீர்வாதம் அவர்கள் கடனாக கொடுத்து உதவினார்கள் என்பது குறிப்படத்தக்கது. திரு. K.R. ஆசீர்வாதம் அவர்களை இப்பகுதி மக்கள் புதுப்பணக்காரர் என்று அழைப்பார்கள். கர்த்தருக்கு பயந்த தேவமனிதர், அவர்கள் மகன் சுவிசேஷகர் நெல்லை ஜெபராஜ் வல்லமையாய் ஊழியம் செய்ததை இன்றும் நாங்கள் நினைவு கூறுகின்றோம்.
பல தடைகளை தாண்டி பண்ணைவிளை புதுார் ஆலயம் 1967 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பிரதிஷ்டை ஒழுங்கு செய்யப்பட்டு அன்றைய திருநெல்வேலி திருமண்டல பேராயர் கமிஷனரி அருட்திரு. ஜோசப் ஆபிரகாம் அவர்கள் வருவதாக இருந்தது. அலுவல் பணியினிமித்தம் தடைபட்டது. பின்னர் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி வியாக்கிழமை (25.10.1967) பேராயர் கமிஷனரி அருட்திரு. ஜோசப் ஆபிரகாம் அவர்களால் பரிசுத்த லுாக்கா ஆலயம் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.






Mr. J. David Isaac
Catechist


Our Soldiers
ஆலய கட்டுமானப் பணியில் சிறப்பாக பங்காற்றியவர்கள்:
ஆலய பணிக்கென்று தங்கள் தோள் கொடுத்து உழைத்த, காலஞ்சென்ற சபை முன்னோர்களை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
திரு. V. குருபாதம் – ஆலய கட்டுமான பொருளாளா் (திரு.G. கிருபை அவர்கள் தந்தை)
திரு. V. மாற்கு (திரு.M.வேதராஜ் அவர்கள் தந்தை)
திரு. K. சாமுவேல் (திரு.S. வேதமாணிக்கம் அவர்கள் தந்தை)
திரு. V. செல்லத்துரை (திரு.C. ஜெயம் அவர்கள் தந்தை)
திரு. மா. ஐயாத்துரை (திரு. I. காமராஜ் அவர்கள் தந்தை)
திரு. D. ஏசுவடியான் (திரு.ஏ. லாசரு அவர்கள் தந்தை)
&
இன்றளவும் நம்முடன் சபைப்பணியில் ஈடுபடும் சபையின் மூத்த சகோதரா்
திரு. பா. விசுவாசம் (திரு.V. பால்துரை அவர்கள் தந்தை) அவர்களையும் நன்றியுடன் நினைக்கின்றோம்.
நெகேமியா 2:18 எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் என்ற வசனத்தின்படி பாி. லுாக்கா ஆலய கட்டுமானப் பணியில் சிறப்பாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களை நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.
Our Ministers
ஆலயத்தில் பணி செய்த சபை ஊழியர்கள் :
1. திரு. ஜோசப் ஆசிரியர் @ பக்கிள் சார் (ஆலய கட்டுமானப்பணியில் உழைத்தவா்)
2. திரு. A. சாமுவேல் ஆசிரியர்
3. திரு. N.S. எட்வர்ட் ஆசிரியர்
4. திரு. ஏசுதாசன் ஆசிரியர்
5. திரு. A. சாமுவேல் ஆசிரியர் (2வது முறை)
6. திரு. J. டேவிட் ஐசக் (1.11.2019 முதல்)
Our Church Sexton
சபை ஆலயப் பணியாளர்கள்:
1. திரு. சிலுவை முத்து (அருட்திரு. S. பொன்மனுவேல் ஐயா அவர்களின் தந்தை) பண்ணைவிளை பாிசுத்த திரித்துவ ஆலயத்திலும் பணி செய்தாா்கள்)
2. திருமதி. அன்னம்மாள் ஜெபமணி (திரு.யோ. யோசேப்பு அவர்கள் பாட்டி)
3. திரு. I. காமராஜ் ஜாண்
4. திருமதி. முத்தம்மாள்
5. திரு. த. பால்ராஜ்
6. திரு. த. முத்துராஜ்
7. திரு. I. விக்டர் ஜெயசிங்
8. திரு. V. குணபால்
9. திரு. J. சுந்தர்
10. திரு. J. ஜெபசீலன்
11. திரு. I. காமராஜ் ஜாண் (2002 ஆம் ஆண்டு முதல் 2வது முறை)
Church Timeline
ஆலய வரலாறு
1935 - ஓலை ஆலயம் – 1935 ம் ஆண்டிலிருந்து 1967 வரை
1967 அக்டோபர் 18 - பாிசுத்த லுாக்காவின் திருநாளன்று திறக்க இருந்தது தடைபட்டது முன்னோர்களை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்க ஒன்று
1967 - பாிசுத்த லுாக்கா ஆலயம் பிரதிஷ்டை - அக்டோபர் 25, 1967 புதன் கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
1977 ல் கோபுரம் பிரதிஷ்டைபிரதிஷ்டை செய்யப்பட்டது.
2002 ஆலய அசனம் ஆரம்பம் – 2002 அக்டோபர் 26ம் தேதி அருட்திரு. கிறிஸ்டியன் தேவராஜ் ஐயா அவர்களால் முதல் அசன பண்டிகை சிறப்பாக நடைபெற்றது.
2010 ல் ஆலய மண்டபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2014 ல் ஜெப கூடாரம் பிரதிஷ்டை - அருட்திரு. ஜெபவாசகன் (சேகரகுரு) ஐயா அவர்களால் ஜெபித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு முதல் விடுமுறை வேதாகமப் பள்ளி நம் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது.
Church Worship Details:
ஆலய ஆராதனை ஒழுங்குகள்:
மாதத்தின் முதலாம் தேதி - வாக்குத்தத்த ஆராதனை காலை 5:00 மணிக்கு
மாதத்தின் முதலாம் தேதி - திருவிருந்து ஆராதனை மாலை 7:00 மணிக்கு
இரவு ஆராதனை தினமும் மாலை 7:00 மணிக்கு
சுவிசேஷ ஞாயிறு – செப்டம்பர் 3ம் ஞாயிறு சிறப்பாக ஆசரிக்கப்படுகிறது.
ஆலய பிரதிஷ்டை ஒழுங்குகள்: (வருடந்தோறும்)
அக்டோபா் 23 நற்செய்தி கூட்டம் (கன்வென்ஷன்)
அக்டோபர் 24 ஆயத்த ஆராதனை இரவு 7:00 மணிக்கு
அக்டோபர் 25 பண்டிகை ஆராதனை - ஞானஸ்நான ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை இரவு 7:00 மணிக்கு
அக்டோபர் 26ம் தேதி காலை அசன ஆயத்தம்
அக்டோபர் 26ம் தேதி மதியம் 1:00 மணிக்கு அசன விருந்து நடைபெறும்.
அக்டோபா் 26ம் தேதி மாலை 7:00 மணி பஜனை பிரசங்கம்
லெந்து கால ஒழுங்குகள்:
கன்வென்ஷன் - புதன் மாலை 7:00 மணி
திருவிருந்து ஆராதனை - வியாழன் மாலை 7:00 மணி
Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.