பண்ணைவிளைக்கு மிஷனரிகளால் வந்த சுவிசேஷமும், சமூக முன்னேற்றமும்
Rev. CTE Rhenius (5 November 1790 – 5 June 1838)
Rev. John Thomas Tucker (1792-1873)
Rev. Thomas Walker (1859 - 1912)
Rt Rev Dr Edward Sargent DD (1815–1889)
Sister Amy Beatrice Carmichael (16 Dec 1867 – 18 Jan 1951)


1500+
15+
Churches
Faithful Family
שמענו באוזנינו ה' אמרו לנו אבותינו מה מלאכה עשית בימיהם בימי קדם. (תהלים 44:1)
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். (சங். 44:1)
Holy Trinity Church, Nattathi (Click to Enlarge)
Holy Trinity Church, Nattathi (Click to Enlarge)
Write a short text about your service






பண்ணைவிளை வரலாறு
பண்ணைவிளை கிராமம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி (முன்னாளில் திருநெல்வேலி) மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா தற்பொழுது (ஏரல் தாலுகாவாக மாற்றப்பட்டுள்ளது), பெருங்குளம் பஞ்சாயத்தில் அடங்கிய 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அடங்கிய கிராமம். இதன் பெயர் உலகளவில் பிரசித்தப்பெற்றது. இதற்கு காரணம் இங்கு வந்து மிஷனெரிப்பணிகள் செய்திட்ட Rev. தாமஸ் வாக்கர் (1859-1912) Rev. ஜாண் தாமஸ் தக்கர் ஐயர் மற்றும் அருட்சகோதரி ஏமி கார்மிக்கல் அம்மையார் ஆகும்.
ஊரை சுற்றிலும் பனைமரம் நடுவில் அழகிய கிராமம். பண்ணைவிளையில் அனைவரும் பாமர மக்கள். பனையேறி வாழ்ந்த இம்மக்களில் பெரும்பாலானோர் தற்பொழுது அத்தொழிலை விட்டு விட்டு தற்சமயம் கொத்தனார்களாகி கட்டிடப்பணிகள் செய்கின்றனர். இங்கு வசித்த குடிமக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வாழ்வளித்தது இங்குள்ள பனை மரங்கள் ஆகும். கற்பவிருட்சமான பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், கருப்புக்கட்டி, நுங்கு இவர்களுக்கு தொழில் பொருட்களாக காணப்பட்டது.
Rev.ஜாண் தாமஸ் தக்கர் ஐயர் பண்ணைவிளை பகுதியில் 1844 - 1865 வரை இங்கு பணி செய்தார்கள். அவரது பெரும் முயற்சியால் பங்களா கிறிஸ்து ஆலயம் 1849 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி (3.8.1849) அருட்திரு. எட்வர்ட் சார்ஜன்ட் ஐயர் பிரதிஷ்டை செய்ய அருட்திரு. ஷாப்ற்றர் ஐயர் பிரசங்கம் பண்ணினார்கள் என்பது வரலாறு.
பண்ணைவிளை பங்களாவில் (வெள்ளைகாரர்கள் குடியேறியபகுதி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்து ஆலயம் இங்குள்ளது) மிஷனெரிகள் தங்கிபணியாற்றி பெரிய வீடுகள் இருந்த இந்தபகுதி பங்களா என்றழைக்கப்பட்டது. இன்றும் பங்களா பெயருக்கேற்ப அருமையான அமைதியான பங்களா போன்ற வீடுகள், வேதாகமத்தில் தமஸ்கு நேர்த்தெரு போன்ற நோ்த்தியான நேரான தெருக்கள் பார்ப்பதற்கு பரவசமூட்டும். இது போன்று சுரண்டையிலும் பங்களா சுரண்டை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சுரண்டை நகரானது கீழ்சுரண்டை, பங்களாசுரண்டை, மேலச்சுரண்டைஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானதுஆகும்.
Immanuel Church, Kannandivilai (Click to Enlarge)
Christ Church, Vanniyanoor (Click to Enlarge)
நட்டாத்தி
கண்ணாண்டிவிளை
வன்னியனுாா்
தாவீது முக்கந்தன்
பண்ணைவிளையைச் சார்ந்த தாவீது முக்கந்தன் என்ற பக்தரொருவரும் அவ்வூரின் உபதேசியாரும் அடிக்கடி மொட்டைச்சிக் குடியிருப்புக்குச் சென்று சுவிசேஷம் கூறியதின் பயனாய், 1858 ஆம் ஆண்டில் அவ்வூராரில் 60 பேர் கிறிஸ்து - சபையில் சேர்ந்தார்கள். மற்ற கிராமங்களில் புறமத்தினரால் ஏற்பட்ட உபத்திரவங்களை 4 ஆண்டுகளாக சகித்து கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் காட்டிய அன்பும் பொறுமையும் பகைத்து துன்புறுத்திய மக்களை கவர்ந்து விட்டது.
அதன் விளைவாக அம்மக்களும் கிறிஸ்துவினடியார்களாக விரும்பி பண்ணைவிளை மிஷனெரி தக்கர் ஐயருக்கு செய்தி அனுப்பினார்கள். செய்தி கிடைத்த மறுநாள் ஜூலை 19, 1863 ல் தக்கர் ஐயரும், உபதேசிமாரும் தாவீது முக்கந்தரும் மொட்டைச்சிக்குடியிருப்புக்குச் சென்றனர். அன்று நடந்த ஆராதனையில் அனைவரும் கலந்து கொண்டு ஞானஸ்நானம். பெற்றார்கள். திடப்படுத்தல் பெற்றிருந்த நற்கருணைக்காரருக்கு அன்று தான் திருவிருந்து பரிமாறப்பட்டது. அதுவே அங்கு பின்னர் ஊராரின் நடைபெற்ற முதல் நற்கருணை. வேண்டுகோளுக்கிணங்க மொட்டச்சிக் குடியிருப்பை இன்று மங்களகரமான காரியம் நடைபெற்றதாக மங்களபுரம் என்று பெயர் மாற்றம் செய்தார். (ஆதாரம் : மறையயிருந்த மாணிக்க கற்கள் 1970)
பண்ணைவிளைக்கு தாய் சபையாக, வெள்ளைக்கார மிஷனரிகளால் ஆலயம் மற்றும் பள்ளி நிறுவ வசதியான இடம் வாங்கி கட்டப்பட்டது பெருங்குளம் குளக்கரையை ஒட்டிய வடகிழக்கு பகுதியாக அமைந்தது. உயா்சாதியினரால் ஒடுக்கப்பட்ட நிலைமையில் வாழ்ந்த நாடார் சமூகத்தினர் வசித்த பகுதியும், சுவிசேஷத்தினிமித்தமும், கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்ட ஜனங்கள் வாழும் பகுதியுமாக பண்ணைவிளை இருந்தது. பண்ணைவிளையின் முதல் ஆலயமாக வானுயா்ந்து நிற்கும் கிறிஸ்து ஆலயம், தக்கா் பள்ளி, வெள்ளைக்காரா்களின் பங்களாக்கள் அமைந்த பகுதி பண்ணைவிளை மக்களால் பங்களா என்றழைக்கப்பட்டு இன்றளவும் பண்ணைவிளை பங்களா என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது.
திருநெல்வேலி திருமண்டலத்தில் முக்கிய திருச்சபையாக பண்ணைவிளை சா்க்கிள் (Pannaivilai Circle) ஒன்றிசைந்து செயல்பட்டது. இந்த பண்ணைவிளை சர்க்கிள் கைலாசபுரம் வரை சபைகள் ஒன்றிணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னாட்களில் நிர்வாக வசதிக்காக சேகரங்களாகவும், கவுன்சில்களாகவும் பிரிக்கப்பட்டு, பண்ணைவிளை தனி சேகரமாக மாறியது.
பண்ணைவிளையின் குடிமக்களில் பெரும்பகுதி விசுவாசிகள் கர்த்தரை ஆராதிக்க, கிறிஸ்து ஆலயம் அமைந்த பங்களாவிற்கு நடந்து செல்ல வேண்டும். முக்கிய பண்டிகை நாட்களில் நள்ளிரவு ஆராதனைக்கு நடந்து செல்ல வேண்டும். புதுவருட ஆராதனை, கிறிஸ்து உயிர்த்தெழுதல் (ஈஸ்டா்) ஆராதனை, கிறிஸ்துமஸ் ஆராதனை என்று முக்கிய ஆராதனைகள் நள்ளிரவில் ஆராதனை நடைபெறும் நிலை இருந்தபடியால் 1 கிமீ அளவிலான இந்த துாரத்தை வயதானவா்கள் கடந்து சென்று கா்த்தரை ஆராதிக்க சிரமம் ஏற்பட்டபடியினால் வடக்கில் குடியிருப்பு பகுதியல் ஒரு ஆலயம் தேவை என்ற கருத்து உருவானது.
இதனடிப்படையில், இந்த கனவு 1924ம் ஆண்டு தான் நிறைவேறியது. அதாவது பங்களா கிறிஸ்து ஆலயம் நிறுவப்பட்டு சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆலயம் தனியாக கட்டப்பட்டாலும் காலை, இரவு ஆராதனைகள் இங்கு நடைபெற்றது. பிற முக்கிய ஆராதனைகள் கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்றது. இருப்பினும் 1990 ஆண்டுகள் வரை முக்கிய பண்டிகை ஆராதனைகள் பங்களா கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்றபடியால் அங்கே சென்று கலந்து கொள்ளும் நிலை இருந்தது. படிப்படியாக அங்கு செல்ல முடியாத மனநிலையில் ஆராதனையை சபைமக்கள் புறக்கணிக்கும் நிலையில் இதனை தவிர்க்கவே அனைத்து ஆராதனைகளும் பண்ணைவிளை பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற சபையார் விரும்பி இங்கு ஆராதனைகள் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
அறுப்பின் பண்டிகை
பண்ணைவிளையில் சர்க்கிள் அளவில் வெகுவிமரிசையாக நடைபெற்ற அறுப்பின் பண்டிகை, தற்பொழுது சேகர அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு அறுப்பின் பண்டிகைக்கு மாட்டு வண்டியில் வந்து தங்கியிருந்து ஆசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஈஸ்டா் பண்டிகை முடிந்த பின் அதே வாரத்தின் செவ்வாய் அன்று திரள் மக்கள் கூடி திருவிழாவாக காணப்படும். பலகாரக்கடைகள் முதல் விற்பனைக்கு பலவித பொருட்கள் விற்பனைக்கு வரும். வெயிலில் வரும் மக்கள் களைப்பை நீக்கி மோர் பந்தல் அமைக்கப்பட்டு அனைவருக்கும் மோர் வழங்கப்படும். சபைமக்களின் முதற்பலனாகிய விளைபொருட்கள் அனைத்தும் ஆலயத்தில் சபை வாரியாக முன்வந்து ஆலயத்தில் படைப்பார்கள். ஆலய ஆராதனைக்குப்பின் இந்த பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயத்தினை தாய் சபையாக எண்ணி, போற்றி பண்ணைவிளை சபையார் அனைத்து காரியங்களிலும் முன்னின்று காணிக்கை படைப்பதையும், உழைப்பதையும் இன்றளவும் காணலாம். பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயம் மிஷனரிகளாலும், வெள்ளைக்காரா்களாலும் கட்டி எழுப்பப்பட்டது. 1993 ஆம் ஆண்டு முதல் பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயத்தில் அசன விருந்து ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பனைமரங்கள் நிறைந்து அழகு சோ்க்கும் இக்கிராமம் கிழங்கு, பதநீா், நுங்கு போன்ற பனைப்பொருட்களுக்கு போ்பெற்றது. ஊரின் மேற்கே கடல் போன்று காட்சியளிக்கும் பெருங்குளம் சுற்றுவட்டார விவசாயத்திற்கும், குடிப்பதற்கு தண்ணீரும் வழங்குகின்றது. குளக்கரையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிணற்றிலிருந்து பண்ணைவிளை மக்களுக்கு தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டது. காலப்போக்கில் மின்மோட்டார் வசதிகளுடன் கிணற்றிலிருந்தும், தற்பொழுது கிணறு துார்ந்து மூடப்பட்டு, பல ஆழ்துளை கிணற்றிலிருந்து மின்மோட்டார் வழியாக சுற்றுவட்டார அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வசதி பெறப்படுகின்றது.
பள்ளிகள், மருத்துவமனை:
பண்ணைவிளையில் தக்கா் மேல்நிலைப்பள்ளி, துா.நா.தி.அ. துவக்கப்பள்ளி மேலும் 2024ம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியும் செயல்பட்டு வருகின்றது. மேலும் அரசு கால்நடை மருத்துவமனை, பண்டாரவிளை ப்ரைமரி ஹெல்த் சென்டா் மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றது. பண்ணைவிளையில் தபால் அலுவலகம் 628751 செயல்பட்டு வருகின்றது. பண்ணைவிளை ஆலய வளாகத்திற்குள் தானியேல் முக்குந்தா் - நற்குணத்தான் நுாலகமும் செயல்பட்டு வருகின்றது.
தக்கர் மேல்நிலைப்பள்ளி Rev.Dr.ஜாண் தாமஸ் தக்கர் அவர்களால் 1844 ஆம் ஆண்டு தங்கும் சிறு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது தான் தக்கர் மேல்நிலைப்பள்ளி.
இரண்டாகப் பிரித்து போர்டிங் பிள்ளைகளுக்கு ஒரு தனிப் பள்ளியையும் மற்றவர்களுக்கு ஒரு தனிப்பள்ளியையும் நிறுவினார். (தக்கா் பள்ளியின் வரலாறு தனியாக உள்ளது காண்க (Click Here)


இங்கிலாந்தில் டார்ஸெட்ஷயா் மாவட்டத்திலுள்ள மில்போர்ன் என்ற கிராமச் சபையாரில் 70 போ் சோ்ந்து, மாதந்தோறும் தங்களுக்குள் பணம் பிரித்து, தங்களது குரு அருட்திரு. ஜி. ஹாட்லி (Rev. G. Hadley) ஐயா் மூலமாக வாக்குப்பண்ணி அனுப்பின தொகையைக் கொண்டு, பண்ணைவிளை கிராமத்தில் பிலதெல்பியா பள்ளி (Philadelphia School) என்ற பெயருடன் 1849 ஆகஸ்ட் 23ம் நாள் ஒரு பள்ளிக்கூடத்தை அருட்திரு. ஜாண் தாமஸ் தக்கர் ஐயர் அவர்கள் நிறுவினார். அதுவே இன்று நமது கிராமத்தில் TNDTA ஆரம்ப பள்ளியாக 176 வருட சிறப்புடன் விளங்குகின்றது. (ஆதாரம் நற்போதகம் 125 ஆம் ஆண்டு சிறப்பு மலர்).
பள்ளியின் கூரைபகுதியிலுள்ள, மரங்கள், ஓடுகள் மிகவும் சேத சேதமடைந்த நிலையில், திரு. ஆ. தேவசகாயம் மற்றும் அருட்திரு. ஆ. டேவிட்ராஜ் ஐயா அவர்கள் அதைப் புதுப்பித்து கட்ட முயற்சி எடுத்து, நன்கொடைகள் பெறப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது, டாக்டா். M. எஸ்றா சற்குணம் அவா்களால் 2019 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆங்கில வழிக் கல்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தலைமை ஆசிரியராக திரு. ஜெயசீலன் அவர்கள் பணியாற்றிட அவா்கள் கீழ் 3 ஆசிரியைகள் பணி செய்கின்றார்கள். பழைய கட்டிடம் உடைக்கப்படாமல் அருகிலுள்ளதை இன்றும் காணலாம்.


Welcome
Explore the serene village of Pannaivilai today.
Connect
Church news letter need?
info@pannaivilai.in
+91-741 741 4343
Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.